வருமானத்தை முறையாக அமைத்துக்கொண்டால் வரி திட்டமிடல் (tax planning) மூலம் வரி கட்டாமல் அல்லது குறைந்த அளவே கட்டுவது இயல்பாகிறது.
மதிப்பீட்டு ஆண்டு 2025-26க்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 15 என்று மதிய நிதி அமைச்சகம் அறிவித்துவிட்டது. இன்னும் சுளையாக நான்கரை மாதங்கள் உள்ளன.
காரணங்கள் இதோ:-
ஆன்லைனில் தாக்கல் செய்யப்படக்கூடிய வருமான வரி கணக்கு படிவங்களில் சில மாறுதல்கள் செய்கிறார்களாம். சரியான படிவங்களை மக்களின் உபயோகத்திற்காக வருவதற்கு சற்று தாமதமாகலாம். இந்த செயலிகளின் பயன்பாட்டில் முதல் சில நாட்களில் ஏற்படும் டெக்னிகல் கடினங்கள் உடனுக்குடன் சரி செய்து நிலை பெறவும் ஜூன் 15 ஆகி விடுகிறது. இந்த மாறுதல்கள் வருமானவரித்துறை வருடா வருடம் செய்துகொண்டு தான் இருக்கிறது.
எதிர்பார்க்கப்படும் வரி சேகரிப்பு ஒரு தரவு மூலம் எடுத்தாலும் வரி ஏய்ப்பு, தாமதமான மற்றும் சட்டத்தை தனக்கு சாதகமாக அனுமானிப்பதாலும் இந்த சேகரிப்பில் எப்போதும் துண்டு விழுகிறது. நாடு தழுவைய நிதி சார்ந்த பரிவர்த்தனைகளில் (transactions) வருமான வரித்துறை கண் வைத்துக்கொண்டுதான் இருக்கிறது, அதன்படி தரவுகளை நிதி நிறுவனங்களிமிருந்து நிரந்தர கணக்கு எண் (PAN) அடிப்படையில் தோண்டி எடுத்து சம்பந்தப்பட்ட மதிப்பீட்டாளர்களுக்கு (assessees) முக்கியமான மூன்று அறிக்கைகள் முறையே
- படிவம் 26AS
- AIS (Annual Information statement) எனப்படும் வருடாந்திர தகவல் அறிக்கை
- TIS ( Taxpayer Information Summary) எனப்படும் வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம்
மூலம் அவரவர்களின் வருமானத்தையும் , சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் பிடித்துள்ள (TDS) வரி விபரங்களையும் துல்லியமாக தெரிவிக்கின்றது.
ஆனால், இங்குதான் தாமதத்திற்கான காரணம் உருவாகிறது.
பிடித்துள்ள (TDS) வரி விபரங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மே 31 என்றாலும் அந்த பகுதியிலும் கடைசி நிமிட பளு, டெக்னிகல் தகறாரு, கம்பெனிகளிடமிருந்து இந்த பண வரவு பெறுதல் மற்றும் அதன் சரியான ஒப்பிடல் (reconciliation), TDS சர்டிஃபிகேட் (form 16, 16A சம்பந்தப்பட்ட நபர்களுக்கு (assessees) கொடுப்பது போன்ற இத்யாதிகள் ஒரு வழியாக நிலைக்கு வருவதற்கு ஜூன் 15 ஆகி விடும். அதனால் இந்த தேதி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த TDS விபரங்கள் form # 26AS ல் நிலை பெறவும் இரண்டிலிருந்து மூன்று நாட்களாகிவிடுகிறது.
, மதிப்பிடுபவர்கள் (assessees) தத்தம் நிரந்தர கணக்கு எண் (PAN) அடிப்படையில் அறிக்கைகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தனியாகவே, இந்த ஆண்டில் கையாண்ட நிதி பரிவர்த்தனைகள் ஒவ்வொன்றையும் சம்பளம், வங்கி மற்றும் கம்பெனி வைப்புகளின் மீதான வட்டி, பங்குகள் விற்பனையில் கிடைக்கப்பெறும் லாப/நஷ்டம் போன்ற வருமானங்களின் வழிகள் போன்றவற்றையும் சேகரித்து வைத்துக்கொண்டால் வருமான வரித் துறை விபரங்களுடன் சரி பார்க்க ஏதுவாகும்.
குறிப்பிட்ட பண பரிவர்த்தனைகள் (SFT – Specific Financial Transactions) பற்றிய அறிக்கை கூட ஜூன் 15 வரைக்குள் தான் வருமான வரித்துறையின் தரவுகளுடன் இணைக்கப்படும். இதன் மூலம் AIS (Annual Information statement) எனப்படும் வருடாந்திர வருமான அறிக்கை வருமான வரித்துறையின் போர்டலிலும் தெரிய வரும். இது கிட்டத்தட்ட ஃபைனல் அறிக்கை தான்.
ஜூன் 15 க்கு முன்னம் வரிக் கணக்கை தாக்கல் செய்திருந்தால் கூட, இந்த டிசம்பர் 31க்குள் திருத்தப்பட்ட கணக்கை மீண்டும் தாக்கல் செய்யதாக வேண்டும். இந்த டூப்ளிகேட் வேலையை தவிர்கலாமே.
இதன் மூலம் ஜூன் 15க்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் கணக்குகளில் தாக்கல் செய்பவரின் விபரங்களும் வருமான வரித்துறையின் விபரங்களும் ஒன்றாகவே இருக்கக் காணலாம்.
ஜூன் 15க்கு மேல் கண்டிப்பாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாமா!!!
Leave a comment
Upload