ஸ்ரீநகருக்கு ரயில் பாதை, இந்தியாவுடன் இணைய விரும்பிய காஷ்மீர் ராஜா ஹரி சிங்கின் ஆசை.
119 கிமீ தூரத்தைக் கடக்க 38 சுரங்க பாதைகள், 13 கிமீ தூர அளவிற்கு 927 பாலங்கள் கொண்டது இந்த ரயில் பாதை.
இந்த பாதையில் செனாப் நதியின் மீது
அமைக்கப்பட்டிருக்கும் உலகிலேயே மிகப்பெரிய வளைவு பாலம் ஒரு பொறியியல் வல்லுமையைக் கொடி பிடிக்கும் நிகழ்வாகும். 359 மீட்டர் உயரம் இது. இது ஈஃபில் டவரை விட 35 மீட்டர் உயரம் அதிகம் கொண்டது. இந்த ரயில் பாதையை பாரதப் பிரதமர் மோதியால் நேற்று (6.6.2025) திறந்து வைக்கப்பட்டது. அதே சமயம் வந்தே பாரத் ரயில் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார்.
இன்றிலிருந்து (6.6.2025) காஷ்மீருக்கு வாரத்துக்கு ஆறு நாள் வந்தே பாரத் ஓடும்.
இது ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு இடையிலான ரயில் போக்கு வரத்து ஆகும். இடையில் வைஷ்ணவ் தேவி கட்ரா மற்றும் பனிஹால் என்னுமிடங்களில் மட்டும் தான் நிற்குமாம்.
1994-95 ல் 2,500 கோடி ரூபாயென மதிப்பிடப்பட்ட இந்த திட்டம் 2025ல் முடிவடையும் போது 44,000 கோடி ரூபாயாகிவிட்டது.
Leave a comment
Upload