அன்னையாய்அத்தனாய் என்னை ஆண்டிடும்தன்மையான் சடகோபன் என் நம்பியே
திருநாமம் : நம்மாழ்வார், மாறன், சடகோபன்,வகுளா பரணர், பராங்குசர், பராங்குச நாயகி, குருகைப் பிரான்.
திவ்யதேசம்: திருநெல்வேலி மாவட்டம் திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
அம்சம் : பகவான் விஷ்வக்சேனர் கௌஸ்துபம்
பாடல்கள் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி
'பொலிக, பொலிக' என்று மண்ணுலகத்தில் உள்ள வைணவபக்தர்களுக்கு பல்லாண்டு பாடியநம்மாழ்வார்உதித்ததிருநாளே வைகாசி விசாகம். இந்நாளின்தனிச்சிறப்புகளில்முக்கியமானதாகும்.
யாரிந்தநம்மாழ்வார் ?
வைணவநெறியில்எம்பெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட 12 ஆழ்வார்களில்முதன்மையாககருதப்படுபவர்.
கர்ப்பத்திலிருந்தேஞானத்தை உள்ளடக்கி, உலக மக்கள் போல் உண்டியே, உடையே என்று உலக விஷயங்களின் பின் கவனம் கொள்ளாது, வைணவநெறியில்இறைவனை அடையும் சரணாகதியைஉலகத்தவர்க்குகற்றுத் தந்து, கரை சேர்க்க வந்தவர்.
பிற உயிர்கள்துன்பப்படுவதை கண்டு, 'ஐயோ துன்பப்படுகிறானே' என்று எண்ணுகிறவர்கள்எம்பெருமானுடன்தொடர்புடையவர்கள் என்று நஞ்சீயர் சொல்கிறார்.
அப்படி உலக மக்களைதுன்பங்களிலிருந்து மீட்டெடுக்க, பகவானே தன் அம்சமாய் அவதரிக்க வைத்தவர் தான் நம்மாழ்வார்.
அவருக்கு துணையாக, சேவை செய்ய, ஆதிசேஷன் புளியமரமாய்திருக்குருகூரில் முன்பே வளர்ந்து நின்றார்.
தாமிரபரணிஆற்றங்கரையில், திருக்குருகூர்எனும்திவ்ய தேசத்தில், வசித்தகாரிமாறபிரானும் அவர் மனைவி உடைய நங்கையும், திருகுறுங்குடிபெருமாளானநம்பியிடம் பிள்ளை வரம் வேண்ட, ' நானே மகனாக பிறப்பேன்' என்று வரம் தந்து, கலி பிறந்த 43 ஆம் நாளில், வைகாசி விசாகத்தில், காரிக்கும்நங்கைக்கும்பிள்ளையாக, நம்மாழ்வாராக பிறந்தார்.
பிறந்ததும் மற்ற பிள்ளைகளை போல் அழாமல், உலக மயக்கங்களைதன்னுள் செலுத்தும் சடம் என்னும் வாயுவைகோபத்தோடு தடுத்து (சடகோபன்) உலக இயல்பிலிருந்து மாறுபட்டு நின்றார்.
அதனால் அவர் பெற்றோர் அவருக்கு மாறன் என்று பெயரிட்டு, பொலிந்து நின்ற பிரான் கோவில் புளியமரத்தடியிலிட்டு, அவரை வளர்த்தனர். பேசாது கண் திறக்காதுதவத்திலேயேவளர்ந்தார்.
அவருடைய 16 வயதில், வானில் தெரிந்த ஒளியைப் பின்பற்றி அவரை வந்து சேர்ந்தார் மதுரகவியாழ்வார்.
'செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால்எத்தைத் தின்று எங்கே கிடக்கும்' என்று மதுரகவியார் கேட்க, ' அத்தை தின்று அங்கே கிடக்கும் ' என்று நம்மாழ்வார் தன் திருவாய் மலர்ந்து பேசத் தொடங்க,
அவருடைய ஞானத்தின்முழுமையை உணர்ந்து, சரணாகதி செய்து, அவருக்கே தொண்டாற்றினார்மதுரகவியாழ்வார். 108 திவ்ய தேச பெருமாள்களும், ' என்னைப்பாடு, என்னைப்பாடு ' என்று நம்மாழ்வார் இருந்த புளியமரத்தடிக்கே வந்து பாடல் பெற்று சென்றதாககூறுவர்.
' உயர்வறஉயர்நலம் ' என்று எம்பெருமானின்திவ்ய குணங்களை அனுபவித்து, அவ்வனுபவமேலீட்டால், ரூக், யஜுர், அதர்வணம் என்ற மூன்று வேதங்களின்சாரப்பொருளைதிருவிருத்தம்திருவாசிரியம் பெரிய திருவந்தாதிமூலமாகவும், சாமவேதத்தின்சாரத்தை திருவாய்மொழி மூலமாகவும் பாடி திவ்யபிரபந்தத்தைஅருளினார்நம்மாழ்வார்.
இவற்றின் மூலமாக எம்பெருமானை அடைய எளிய வழிமுறைகளையும், எம்பெருமானுடையநிர்ஹேதுககிருபையையும் (தானாய் நம்மை ஆட்கொள்ளும் தன்மை) காட்டி அருளினார். தனது 35 வயது வரை, எம்பெருமான் நினைவிலேயேபராங்குசநாயகியாய் திளைத்து, வைகுந்தம் அடையப்பெற்றார்.
நவ திருப்பதியில் நடைபெறும் கருட சேவை, தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒன்பது விஷ்ணு கோவில்கள், ஸ்ரீரங்கம் கோவிலின் வைகுண்டஏகாதசியின்போதுஅரையர் சேவை நம்மாழ்வாருக்கானது.
*ஆழ்வார் திருநகரியும்உற்சவங்களும்*
மதுரகவியாழ்வார்நம்மாழ்வாரின்காலத்திற்குப் பின் அவரை சேவிக்க வழி என்ன என்று நம்மாழ்வாரிடம் கேட்க, ' 'தாமிரபரணி ஆற்றை எடுத்து வந்து காய்ச்சினால் மூர்த்தி தோன்றும்' என்ற நம்மாழ்வார் சொல்ல,
அதன்படியே செய்கையில்,
முதலில் பாஷியக்காரரும் (இராமானுஜர்), அடுத்து, சின்முத்திரையோடு நம்மாழ்வாரின்அர்ச்சாமூர்த்தியும் தோன்ற ,
தன் சக்தியைநம்மாழ்வாரே அதில் செலுத்தி வழிபாட்டுக்கு தந்தருளுகிறார்.
பிற்காலத்தில், படையெடுப்புகளுக்கு பயந்து அர்ச்சாமூர்த்தியைகேரள நாட்டில் குறவர்கள் பாதுகாப்பில் வைக்க,
அதன் பின்னர் திருமலை ஆழ்வார் என்னும் அடியவர்,
காடாய் கிடந்த திருநகரியை திருத்தி, ஆழ்வாரைகேரளத்திலிருந்து எடுத்து வந்து ஆராதனைகளை தொடர செய்கிறார்.
மாசியும், வைகாசியும்நம்மாழ்வாருக்கானஉற்சவங்களாய்ஆழ்வார்திருநகரில்கொண்டாடப்படுகிறது.
அந்த மண்ணில் கால் பதிக்கும் அனுபவம் தனியான உணர்வைத் தருகிறது. மாசியில்தாமிரபரணி நீரை காய்ச்சி அர்ச்சா மூர்த்தி தோன்றியதையும், வைகாசியில்ஆழ்வாரின்திருநட்சத்திரத்தையும்கொண்டாடும் பொருட்டு உற்சவம் நடைபெறுகிறது.
(ஓவியக்குறிப்பு)
(நம்மாழ்வார், ஆழ்வார் திருநகரியில் சேவை சாதிக்கிறபடி. உற்சவத்தின் போது நம்மாழ்வார் வெண்ணைத்தாழி கண்ணனாக அலங்காரத்தில் சேவை சாதிக்கிறார்.)
*வைகாசி விசாகத்தின்* *நவதிருப்பதி* *கருட சேவை*
வைகாசி விசாகம் பத்து நாட்கள் உற்சவத்தில்,
ஐந்தாம் நாளில்,
ஸ்ரீவைகுண்டம்வைகுண்டபதி, வரகுணமங்கைவிஜயாசன பெருமாள், திருப்புளியங்குடி பூமி பாலகர், பெருங்குளம் மாயக்கூத்தன், இரட்டை திருப்பதியிலிருந்துஅரவிந்தலோசனன், தேவர்பிரான், திருக்கோளூர்வைத்தமாநிதி பெருமாள், தென்திருப்பேறையிலிருந்துமகரநெடுங்குழைக்காதர் எல்லோரும் மூடுபல்லக்கில் ஆழ்வார் திருநகரிக்குஎழுந்தருளி, அன்றிரவு பொலிந்து நின்ற பிரானோடு சேர்ந்து, நம்மாழ்வார்க்கும்மதுரகவியாழ்வருக்கும் அருள் பாலிப்பதே நவதிருப்பதிகருட சேவை. அவ்வைபவத்தில்,
நம்மாழ்வார் அன்னவாகனத்திலும் மதுரகவியாழ்வார் பரங்கிக்கால் நாற்காலியிலும் முதலில் வெளியே வந்து கோபுரத்தை பார்த்தவாறு திரும்பி நிற்க, பொலிந்து நின்ற பிரானில் தொடங்கி, ஒன்பது பெருமாளும்கருடவாகனத்தில் வெளிவந்து ஆழ்வார்களுக்கு தீர்த்தம் ஸ்ரீ சடாரி தந்து, வீதிப் புறப்பாடு செய்து அருள்பாலிப்பதுகண்கொள்ளாக்காட்சியாகும்.
மறுநாள் ஒவ்வொரு பெருமாளும்ம்தத்தமதுகோவில்களுக்குதிரும்புகையில், நம்மாழ்வார் வெளியே வந்து வழி அனுப்ப, இரட்டை திருப்பதி பெருமாளை தாய் தந்தையாய்நினைத்ததால்நம்மாழ்வார், அவர்கள் செல்கையில் வீதி முடிவு வரை சென்று பிரியா விடை தர, நம்மாழ்வார் மனம் சோராதிருக்கபொலிந்துநின்றபிரான்ஆழ்வாரை எதிர்கொண்டு அழைத்து ஆறுதல் சொல்ல,
பக்தியும்பந்தமும் நெகிழ்ந்து நடைபெறும் நிகழ்வில், பக்தர்களெல்லாம் கண்ணீர் சொரிய, கூடியிருந்துகுளிர எல்லோரும் ஆழ்வார்திருநகரிக்கு தப்பாமல் செல்ல வேண்டும்.
நம்பெருமாள்' நம் மாழ்வானைப்பாடினையோ' என்று மாறன்சடகோபனுக்குநம்மாழ்வார் என பெயர் சூட்டினதை, அவ்வூரார் மட்டும் , தேர் இழுத்தபடிஉரிமையாய் ' எம்மாழ்வானே, எம்மாழ்வானே என்று சொல்வதை கேட்கவேஆனந்தமாய் இருக்கும்.
தன் அர்ச்சாமூர்த்திதோன்றியதாமிரபரணி ஆற்றில், வைகாசி விசாகத்தன்று(9.6.25)தீர்த்தவாரியில், நம்மாழ்வாரோடும் அவர் பாதுகையானஸ்ரீசடகோபத்தோடும், நாமும் மூழ்கி எழுகையில்,
' மெய்யேபெற்றொழிந்தேன் ; விதிவாய்கின்றுகாப்பாரார் ; ஐயோ ..'
என்று ஆழ்வாரோடு கலந்து, ஆனந்த கூத்தாடும் அனுபவம் கிடைக்கப்பெறும். அப்படிப்பட்ட பெரும் பேரினை எல்லோரும் பெற்று, கடல் சூழ்ந்தமண்ணுலகம் நலமாய்வாழ பிரார்த்திப்போமாக !
Leave a comment
Upload