'முத்த மழை '
தக் லைஃப் படத்தில் முத்தமழை பாடலை பின்னனி பாடகி தீ பாடி இருந்தார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தபோது இப்பாடலை மேடையில் பாடியது பாடகி சின்மயி. .
முத்த மழை பாடலை இந்தி மற்றும் தெலுங்கில் சின்மயி பாடி இருக்கிறார்.
தமிழில் அவருக்கு பாட தடை விதித்து இருப்பதால் அவர் தமிழில் பாடவில்லை.
தீயின் குரலை விட சின்மயின் குரல் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது.
நெட்டிசன்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் சமூக வலைதளங்கள் முழுவதும் சின்மயியை கொண்டாடுகிறார்கள் .கூன
அவருக்கு தமிழ் பாட தடை விதித்தது ஏன் என்ற கேள்வியும் எழுப்பி இருக்கிறார்கள்.
டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதா ரவி சின்மயி எங்களிடம் எதுவும் பேசாமல் நீதிமன்றம் போய்விட்டார். அங்கு வாழ்நாள் சந்தா கட்டி இருப்பதாக பொய் சொன்னார். அதனால் தான் அவருக்கு தடை விதிக்கப்பட்டது என்று சொல்லி இருக்கிறார் ராதாரவி.
சந்தா பிரச்சனையை வைத்து ஒருவரின் திறமையை அழிப்பதா என்ற கேள்விக்கு இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டார் ராதாரவி.
ராதாரவி சொன்னது இந்த இணையத்தில் வைரலானது .அவருக்கு எதிர்ப்பாகவும் சிலர் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்
பிரபல பாடலாசிரியர் மீது சின்மயி தெரிவித்த மீடூ புகார் தொடர்பாகவும் இப்போது இணையத்தில் சூடான விவாதம் நடந்து வருகிறது.
சின்மயி தனது சமூக வலை பக்கத்தில் "கடந்த சில ஆண்டுகளாக நான் அனுபவித்த மோசமான வார்த்தைகள் பொய்யர், அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்ட பெண் இவை எல்லாவற்றையும் கடவுளுக்கே அர்ப்பணிக்கிறேன்.
கர்மாவும் ,கடவுளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் பதிலடி கொடுக்கட்டும் உண்மை வெல்லட்டும் என்று பதிவு செய்திருக்கிறார்.
அதே பதிவில் மேடையில் பாடிய அவரது பாடலுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் பாராட்டு வந்ததற்கும் "கலைஞர்களான நாங்கள் ஒருவரை ஒருவர் போட்டியாளராக பார்க்கவில்லை.
தீ மிகவும் சின்ன பெண். இப்போதே இவ்வளவு அழகாக பாடுகிறார் என்றால் அவருக்கு அருமையான எதிர்காலம் இருக்கிறது. நான் தீயயிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் .இன்னும் 15 ஆண்டுகளில் பாடகி தீ 100 சின்மயி மற்றும் 100 ஸ்ரேயா கோஷலை தாண்டி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சின்மயி மீதான தடையை விலக்க வேண்டும் என்ற குரல் இப்போது ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து இருக்கிறது.
Leave a comment
Upload