பதினெட்டு வருட காத்திருப்பு.
கோலாகலம். கொண்டாட்டம். குதூகலம். எல்லாம் ஒரு நாளில் மாறிப் போகும் என்று விராட் கோலி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார் பாவம்.
பதினெட்டு ஆண்டுகள் காத்திருந்து ஜெயித்த பெங்களூரு அணி தன் வெற்றி விழாவை இப்படி அவசர கோலத்திலா கொண்டாடியிருக்க வேண்டும்.
அது தான் மாதம் பூராவும் இவர்களையே டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே ரசிகர்கள். போதாதா ?? அத்தனை சின்ன ஸ்டேடியத்தில் லட்சக்கணக்கானவர்கள் கூடுவானேன் ??
ஒரு வெற்றிக் கோப்பையை வைத்துக் கொண்டு வலம் வர வேண்டிய கிரிக்கெட் வீரர்கள் மனம் முழுவதும் சோகம் அப்பிக் கொள்வது போல தள்ளுமுள்ளுவில் 11 பேர் இறந்து போய், 33 பேர் கவலைக்கிடமாக இருப்பது ஆகப் பெரிய சோகம் தான்.
யாரையும், எவரையும் இதற்கு பழி போட்டு போன உயிர்கள் வரப் போவதில்லை.
ஆனால் அதற்குள் சித்தராமய்யா கும்பமேளாவில் 50 பேர் இறக்கவில்லையா நாங்கள் ஏதேனும் சொன்னோமா என்ற ரீதியிலும், ஏதோ 11 பேர் இறந்தது கர்நாடக அரசுதான் காரணம் என்ற ரீதியிலும் அரசியல் சாக்கடையில் வேறு ஆளுக்கு ஆள் கல்வீசிக் கொண்டிருக்கிறார்கள்.
இது அதற்கான தருணம் அல்ல. மக்களும் உணர வேண்டும். கோடிகளில் சம்பாதித்துக் கொண்டு செல்லும் வீரர்களை இப்படி அடித்துப் பிடித்துக் கொண்டு உயிரை விட்டு பார்க்க வேண்டுமா ???
மும்பையும் சென்னையும் எத்தனை முறை ஜெயித்தார்கள். இத்தனை அலப்பறை இல்லையே ??
புஷ்பா படம் பார்க்க தியேட்டர் சென்று தள்ளுமுள்ளுவில் ஒருவர் இறந்த போது அல்லு அர்ஜூனாவை கைது செய்தது போலீஸ். அத்தனை கிரிக்கெட் வீரர்களையும் கைது செய்ய முடியுமா ??
நம் நாட்டில் மட்டுமே இது போன்ற விடை தெரியாத கேள்விகள் எப்போதும் துளைத்துக் கொண்டே இருக்கிறது......
Leave a comment
Upload