இந்தியாவின் முதல் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமான (Advanced Medium Combat Aircraft (AMCA) திட்டத்துக்கு கடந்த மே 27-ம் தேதி மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கான முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இது, தனியார் துறை பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது.இது இந்தியாவின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ (தன்னிறைவு இந்தியா) திட்டத்தின்கீழ் ஒரு முன்னெடுப்பாகும்.
சுமார் 25 டன் எடையிலான இரட்டை இன்சின் விமானம், 6.5 டன் உள்எரிபொருள் திறன், 1,500 கிலோ பேலோட் சுமக்கும் திறன், உள்ஆயுத அறையில் 4 நீண்ட தூர air to air ஏவுகணைகள் வைக்கும் வசதி, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் (AI) இயங்கும் எலக்ட்ரானிக் பைலட், நெட்சென்ட்ரிக் வார்பேர் சிஸ்டம், ரியல் டைம் கண்காணிப்பு வசதி ஆகியவை அடங்கியுள்ளன.
‘பாகிஸ்தானுக்கு J-35 ஸ்டெல்த் போர் விமானங்களை சீனா வழங்கலாம்’ என்ற செய்தி வெளியான நிலையில், இந்தியா தனது கியரை மாற்றியுள்ளது. J-36 மற்றும் J-50 போன்ற ஆறாம் தலைமுறை போர் விமான முன்மாதிரிகளை சீனா சோதித்து வருவதாகவும் தெரிகிறது. இப்போதே இந்தியா சுதாரிக்க துவங்கியுள்ளது. இந்த விமானத்தை 2035க்குள் வழங்க DRDO உறுதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் ஆரம்ப செலவு ரூ.15,000 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.
F-22 ராப்டர், F-35 லைட்னிங் II (அமெரிக்கா), J-20 மைட்டி டிராகன் (சீனா), Su-57 (ரஷ்யா) ஆகியவை எல்லாம் இவ்வகைதான். இந்தியா டெவலப் பண்ணுற AMCA விமானமும் ஐந்தாம் தலைமுறை விமானம்தான். ‘இந்தியாவுடைய மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம்’னு சொல்லலாம், இது, உலகத்திலேயே ரொம்ப அட்வான்ஸ்டான போர் விமானமாகவும் இருக்கும். இதை எதிரிகளோட ரேடார்ல கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம், இந்திய விமானப் படைக்கு ஒரு பெரிய முன்னணியை கொடுக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
Leave a comment
Upload