
சென்ற மே 10, ஞாயிறன்று, ஹைதராபாத்தில் தெலங்கானா பாஜக ஏற்பாடு செய்திருந்த பேரணியில் உரையாற்றியபோது, பிரதமர் மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடியை மேற்கோள் காட்டி, பிரதமர் மோதி சில சிக்கன நடவடிக்கைகளை வலியுறுத்தி இருந்தார்.
அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்காக, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைத்தல், நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்துதல், கார் பூலிங், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், பார்சல் போக்குவரத்திற்கு ரயில் சேவைகளைப் பயன்படுத்துதல் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்தல் போன்ற பரிந்துரைகளை பிரதமர் முன்வைத்தார்.
மக்களுக்கு ஆலோசனை வழங்கினால் போதுமா ? சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி தனது வாகன அணிவகுப்பின் அளவைக் குறைத்துள்ளார்.
சிறப்புக் காவல் படையின் (SPG) நெறிமுறையின்படி, அத்தியாவசியப் பாதுகாப்பு அம்சங்களைப் பராமரித்துக்கொண்டே இந்தக் குறைப்பு செய்யப்பட்டது.
அதன் எதிரொலியாய், பல பாஜக முதலமைச்சர்களும் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதாக அறிவித்துள்ளனர், கார் பூலிங்கை ஊக்குவித்துள்ளனர், மேலும் எரிபொருள் சேமிப்பு மற்றும் பொதுப் போக்குவரத்தையும் ஊக்குவித்துள்ளனர்.
டில்லியில் ராம்தாஸ் அதாவ்ளே போன்ற மத்திய அமைச்சர்கள் மெட்ரோ ரயிலில் பிரயானம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
ஹைதராபாத்தில் அவர் ஆற்றிய உரைக்குப் பிறகு, குஜராத் மற்றும் அசாமில் மோடியின் வாகன அணிவகுப்பின் அளவு உடனடியாகக் குறைக்கப்பட்டது. தற்போது அவர்து அணிவகுப்பில் இரண்டு கார்களே உள்ளன.
அஸ்ஸாமில், அடுத்த் ஆறு மாதத்திற்கு புதிய கார்களை வாங்கௌவதில்லை என்று கூறுகிறார் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ்.
புதிய வாகனங்களை வாங்காமல், முடிந்தவரை மின்சார வாகனங்களைத் தனது வாகன அணிவகுப்பில் சேர்க்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைப் பின்பற்றி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை உடனடியாக 50 சதவீதம் குறைக்க உத்தரவிட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர், டிஜிபி, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் அனைத்துத் துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஆதித்யநாத், மாநிலம் முழுவதும் பிரதமரின் சிக்கன நடவடிக்கைகளுக்கான அழைப்பை மக்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், தனது வாகன அணிவகுப்பிற்கு குறைந்தபட்ச எண்ணிக்கையிலான வாகனங்களையே பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், தனது அமைச்சர் சகாக்களும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரிக்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
"மறு உத்தரவு வரும் வரை, பாதுகாப்பு கருதி எனது வாகன அணிவகுப்பில் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான வாகனங்களே இருக்கும். மேலும், வாகனப் பேரணிகள் எதுவும் நடைபெறாது. அனைத்து அமைச்சர்களும் பயணம் செய்யும்போது குறைந்தபட்ச எண்ணிக்கையிலான வாகனங்களையே பயன்படுத்துவார்கள்," என்று யாதவ் கூறினார்.
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்தும் அரசு வாகனங்களுக்கு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா வரம்புகளை அறிவித்துள்ளார்.
டெல்லி மக்கள் தனியார் வாகனங்களுக்குப் பதிலாக கார் பூலிங் முறையைப் பின்பற்றவும், பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகளை அதிகளவில் பயன்படுத்தவும் அவர் வலியுறுத்தினார்.
ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா இதேபோல், தனது வாகன அணிவகுப்பின் பயன்பாட்டைக் குறைக்கவும், குறிப்பாகப் பாதுகாப்பு நோக்கங்களுக்காகத் தேவையற்ற வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், தலைமைச் செயலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் இதேபோன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
அலுவல் பயணங்களுக்காக விமானங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு, முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு அனைத்து அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களுக்குப் பதிலாக, குஜராத்திற்குள் ரயில்கள், மாநிலப் போக்குவரத்துப் பேருந்துகள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தப் போவதாகவும், எரிபொருளைச் சேமிப்பதற்காக அதிகாரப்பூர்வ வாகன அணிவகுப்புகளின் அளவைக் குறைப்பதாகவும் அறிவித்தார்.
வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்குமாறு பிரதமர் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, குஜராத் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வியும் அமெரிக்காவுக்குத் திட்டமிட்டிருந்த தனது பயணத்தை ரத்து செய்தார்.

அதே போன்று மஹாராஷ்ட்டிர மாநில அமைச்சர் அஷிஷ் ஜைஸ்வால் தனது வியட்னாம் பயணத்தை ரத்து செய்து விட்டார்.
பீகார் துணை முதலமைச்சர் விஜய் குமார் சௌத்ரி, தான் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்துள்ளதாகவும், தேவைப்படும்போது மட்டுமே அலுவல் பயணங்களை மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
பீகாரின் மற்ற இரண்டு அமைச்சர்களான லேஷி சிங் மற்றும் ஷீலா மண்டல் ஆகியோரும், தாங்கள் தனிப்பட்ட முறையில் சிக்கன நடவடிக்கைகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.
பிரதமர் சொன்னார். தானும் செய்துள்ளார். தனது கட்சி ஆட்கியில் உள்ள மாநிலங்களிலும் அதன் அடுக்கடுக்கான விளைவு உடனே தெரியவும் ஆரம்பித்து விட்டது.
இதில் அரசியல் செய்யும் நேரமா இது? மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றவேண்டும்.
மத்திய போக்குவரத்து அமைச்சகம் மாநிலத்தில் உள்ள போக்குவரத்துத் துறையினருடன் இணைந்து தினமும், காலையும் மாலையும் நெரிசல் நேர்ங்களில் பொது போக்குவரத்தை மட்டும் ஆதரிக்க வேண்டும். இதில் பொது போக்குவரத்தும் பணம் ஈட்டத்தொடங்கும்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.

Leave a comment
Upload