
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
நடமாடும் தெய்வம் - பாகம் - 21
நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.
இந்த வாரம் இருபத்தி ஒன்றாம் பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி .
ஸ்ரீ புது பெரியவாளை , ஸ்ரீ மகா பெரியவாளை சந்திக்கிறார் ஒரு ஆந்திர தேசத்தை சேர்ந்த பக்தர். ஸ்ரீ புது பெரியவாளிடம் தான் கண்ட கேட்ட கனவை விவரித்து கரணம் கேட்கிறார். பின்பு ஸ்ரீ மகா பெரியவாளை சந்தித்து தான் செய்த பாவங்களுக்கு பரிகாரம் கேட்கிறார். அதே போல் ஒரு தம்பதியினர் தனது குழந்தையின் திருமணத்திற்கு முதல் பத்திரிக்கையை ஸ்ரீ புது பெரியவாளுடன் சமர்ப்பிக்கிறார்கள். அதனை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ புது பெரியவா கேட்கும் கேள்வி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
https://youtu.be/rhw7OvdVkRo?si=nG_MmXGFRtKhQ4XO

Leave a comment
Upload