தொடர்கள்
நொறுக்ஸ்
கொரோனா நோயாளிகளுக்கு கமகம சிக்கன் பிரியாணி... - மாலாஸ்ரீ

20200618030602124.jpg

வேலூர் அருகே திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பிரியாணி உள்ளிட்ட சத்தான அசைவ உணவுகள் வழங்கப்படுகின்றன. இதனால் அம்மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அலுவலர் திலீபன் கூறுகையில், ‘எங்கள் மருத்துவமனையில் வாரம் ஒருமுறை நோயாளிகளுக்கு பிரியாணி, சிக்கன் ப்ரை, முட்டை, சாதம், ரசம் உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்கி வருகிறோம். இதற்காக நாங்கள் அரசிடமிருந்து எவ்வித உதவியையும் எதிர்பார்க்கவில்லை. டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, தங்களது பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு செலவிடும் பணத்தை எங்களிடம் தருகின்றனர். அப்பணத்தை வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவு அளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறோம்.

இதற்கென நாங்களே ஆட்கள் மூலம் பிரியாணி உள்ளிட்ட சத்தான உணவுகளை தயாரித்து, அவற்றை வாரந்தோறும் நோயாளிகளுக்கு சுடச்சுட கமகமக்கும் பிரியாணி உள்ளிட்ட சத்து உணவுகளை வழங்கி வருகிறோம். நாங்கள் நோயாளிகளை விருந்தினர் போல் கவனித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு தேவையான அறுசுவை உணவு மற்றும் மருத்துவ சிகிச்சையை அளிக்கிறோம். அவர்கள் குணமடைந்ததும் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வருவது எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது’ என திலீபன் புன்னகையுடன் கூறுகிறார்.