சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத ஐஏஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சில வாரங்களுக்கு முன்பு ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், அபராதமும் சென்னை உயர்நீதிமன்றம் விதித்தது. அதன் பிறகு அவர் நீதிமன்றம் போய் அந்த உத்தரவுக்கு தடை வாங்கி இருக்கிறார்.
நீதிமன்றம் என்பது சாமானியனின் கடைசி நம்பிக்கை. அவர்கள் உத்தரவை அதிகாரிகள் கேட்டு உடனே செவிமடுத்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று அந்த சாமானியன் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் நீதிமன்ற உத்தரவையே செயல்படுத்தாத அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாவது, அவர்களின் ஐஏஎஸ் பதவிக்கான கருப்பு புள்ளியாக தான் பார்க்க வேண்டியிருக்கிறது. சாமானியன் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும். இந்த நீதிமன்ற அவமதிப்பு தேவையா என்று ஐஏஎஸ் அதிகாரிகள் யோசிப்பது நல்லது.
Leave a comment
Upload