திருப்பரங்குன்றம் மலை ஏறும் படிக்கட்டுகளில் வீம்புக்காக திமுக ஆதரவுடன் ராமநாதபுரம் பாராளுமன்ற முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அசைவ பிரியாணி சாப்பிட்ட வீடியோ சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சையானது.
இதற்கு பதிலடி தருவது போல் மதுரையில் இந்து முன்னணிமுருக பக்தர்கள் மாநாடு நடத்துவோம் என்று அறிவித்தது.
ஆளும் அரசு நாங்கள் ஏற்கனவே பழனியில் பிரம்மாண்டமான முருகர் மாநாடு நடத்திவிட்டோம் என்று பெருமை பேசியது.
இந்து முன்னணி பாரதிய ஜனதா ஆதரவுடன் இந்த மாநாட்டை நடத்தியும் காட்டி விட்டது.
தமிழக அரசு மாநாட்டுக்கு அனுமதி தரவில்லை மாநாட்டு ஏற்பாடு செய்தவர்கள் நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற அனுமதியுடன் தான் மாநாடு நடத்த உத்தரவு வாங்கினார்கள்.
அப்போது கூட மாவட்ட நிர்வாகத்திடம் மாநாட்டுக்கு செல்பவர்கள் அனுமதி வாங்க வேண்டும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை மாநாடு வெற்றிகரமாக நடத்தக்கூடாது என்பதற்காக என்னவெல்லாம் செய்யலாமோ அத்தனை வேலைகளையும் தமிழக அரசு செய்தது.
இது அரசியல் மாநாடு என்று திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தது.
இந்து முன்னணியோ இதை ஒரு பெரிய விஷயமாக பொருட்படுத்தாமல் மாநாடு ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினார்கள்.
மாநாட்டுக்கு இந்துக்கள் வரக்கூடாது என்று கிட்டத்தட்ட 52 நிபந்தனைகளை இந்த அரசு விதித்தது. நாங்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு ஏற்றுக் கொண்டோம்.
மாநாட்டில் கிட்டத்தட்ட ஆறு லட்சத்துக்கு அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள். மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் அஞ்சு லட்சம் பேரை திருப்பி அனுப்ப வேண்டியிருந்தது என்கிறார்கள் இந்து முன்னணியினர் .
ஜூன் 22 முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. அதற்கு முன்பாக மாநாட்டுத் திடலில் தத்ரூபமான ஆறுபடை வீடுகள் கண்காட்சி நடத்தப்பட்டது.
பக்திப் பரவசத்தில் அங்கு பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் முருகனை தரிசித்தார்கள்.
தமிழக ஆளுநர் கூட ஆறுபடை வீடுகளை தரிசித்து மகிழ்ந்தார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மாநாட்டில் கலந்து கொண்டார். அவர் பேசும்போது சிலர் நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். நாம் நிறத்தின் வாயிலாக பார்க்கவில்லை அறத்தின் வாயிலாக பார்க்கிறோம் எலி கூட்டம் எவ்வளவு இருந்தாலும் ஒரு நல்ல பாம்பு சீறினால் எலிகள் ஓடிவிடும். நாம் சிவனின் கழுத்தில் உள்ள நாகப்பாம்பு போல் சீறவேண்டும் "என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது "தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு சட்டம் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என உள்ளது. தமிழக ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை தான் இந்த மாநாடு "என்றார்.
இவை எல்லாவற்றையும் விட ஹைலைட் மாநாட்டில் கலந்து கொண்ட 5 லட்சத்துக்கும் அதிகமான முருக பக்தர்கள் மனம் உருகிப் பாடிய கந்த சஷ்டி கவசம். இது சமூக வலைதளத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
முருக பக்தர்கள் மாநாடு பாஜாவுக்காவுக்கு வலு சேர்க்கும் என்று நம்புகிறது தமிழக பாரதிய ஜனதா. முருகா சரணம். முருகன் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்.
குன்றிருக்கும் இடமெல்லாம் நின்று கொண்டு புன்னகையோடு கவனிக்கிறான் முருகப் பெருமான்.
Leave a comment
Upload