தொடர்கள்
ஆன்மீகம்
" மலைகளின் அரசியின் உச்சியில் 160 வருட முருகன் கோயில் ". - ஸ்வேதா அப்புதாஸ்

ஊட்டி நகரில் இருந்து மூன்று கிலோமீட்டர் மலை உச்சியில் கம்பிரமாக வீற்றிருக்கும் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது .

20250526225413164.jpg

எல்க்ஹில் மலையில் அமைதியான சூழலில் வீற்றிருக்கிறது இந்த முருகன் கோயில் .

வருடந்தோறும் கார்த்திகை தீபமன்று மிக பிரமாண்ட தீபம் ஏற்றி வைப்பது அருமையான ஒன்று .

ஊட்டி நகரே இமை மூடாமல் பார்க்கும் காட்சி .

கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் இந்த மலை மேல் சென்றோம் .

20250526225331207.jpg

எல்க் ஹில் மலையின் உச்சியில் உயர்ந்த படிக்கட்டுகள் அமைக்க பட்டு உயரத்தில் இந்த முருகன் கோயில் வீற்றிருக்கிறது .

அமைதியான மாலை வேளை மழை சற்று விட்டு விட்டு தூறிக்கொண்டிருக்க கோயில் வளாகத்தினுள் சென்றோம் .

கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு புறப்பட்ட இளம் குருக்கள் சந்தோஷ் மித்திரனிடம் பேசினோம் ,

20250526225936194.jpg

" இந்த முருகன் கோயில் 160 வருடம் மிக பழமையான கோயில் .இங்கு வீற்றிருக்கும் முருகன் மிகவும் பிரசித்தி பெற்றவர் .

பழனிக்கு பாதயாத்திரை போக முடியாதவர்களுக்கு தரிசனம் கொடுக்கும் முருக பெருமான் இவர் .

பல கிராமங்களில் இருந்து பக்தர்கள் கால்நடையாக இங்கு வந்து தரிசனம் செய்து ஆசீருடன் திரும்புவது தொடரும் ஒன்று .

தை பூசம் ,பங்குனிஉத்திரம்,

கந்தசஷ்டி ஆகிய நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவது வழக்கம் .

1971 ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடந்துள்ளது .

அதற்கு பின் 2011 ஆம் வருடம் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது .

இந்த நாற்பது ஆண்டை கொண்டாடும் முக்கியத்துவமாக நாற்பது அடி உயர முருகன் சிலை வடிவமைக்க பட்டு பிரதிர்ஷ்டை செய்யப்பட்டது .

20250526225616482.jpg

ஒரு விஷயம் தெரியுமா ?!.. இந்த பிரமாண்ட சிலை செங்கல்லால் கட்டப்பட்டது என்பது ஆச்சிரியமான விஷயம்!.

கரூரில் இருந்து வரவழைக்கப்பட்ட ஸ்தபதி குழு இந்த கம்பிர சிலையை கட்டினார்கள் .

தை பூசம் அன்று தேர் எடுக்கப்படும் அதே போல பங்குனி உத்திரத்தை சிறப்பிக்கும் வகையில் 13 நாள் தேர் எடுத்து சிறப்பிக்கிறோம் .

பால் காவடி ஓமம் பூஜை என்று பிரசித்தி பெற்றது .

தற்போது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 வருடத்திற்கு பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது .

சுற்றுலாக்கள் அதிகம் வந்து போகும் சிறப்பான கோயில் .

2025052623002178.jpg

இந்த கோயிலில் பணிபுரிவது முருகனின் வரப்பிரசாதம் " என்கிறார் இளம் சுவாமிகள் .

இந்து அறநிலை துறையின் கீழ் இயங்கும் கோயில் .

அதே சமயம் இந்த துறை அமைச்சர் சேகர் பாபு இது நாள் வரை இந்த கோயிலுக்கு விஜயம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

படங்கள் :ஹரிஷ் ராகவேந்திரா .