தொடர்கள்
Other
விண்வெளியில் விவசாயம் -ஷுபன்ஷு சுக்லா -மரியா  சிவானந்தம் 

20250527192645587.jpg

விண்வெளியில் இந்தியா மீண்டும் சாதனை நிகழ்த்த உள்ளது .

இம்மண்ணில் பிறந்து வளர்ந்த ஷுபன்ஷு சுக்லா விண்வெளிப்பயணத்தைமேற்கொண்டுள்ளார்.ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளி செல்லும் இந்தியர் ஷுபன்ஷுஆவர்.41 ஆண்டுகளுக்குப் பின் இந்திய வீரர் ஒருவர் நம்நாட்டுக் கொடியைக் தோளில் தாங்கிபறந்துள்ளார் .

உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஷுபன்ஷு சுக்லா, இந்திய விமானப்படையில் இருந்துககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டவர். ரஷ்யாவில் இதற்குரிய பயிற்சியைப்பெற்றவர். இப்போது இவர் அக்ஸியம் 4 திட்டத்துக்காக விண்ணில் பறக்கிறார் .

இரு நாட்களுக்கு முன் ஜூன் 25 ஆம் தேதி புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடிவிண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து ஃபால்கன்-9 ராக்கெட்) விண்வெளி நோக்கி பாய்ந்தது. இந்த ராக்கெட் ‘க்ரூ டிராகன் C213’ என்னும் விண்கலத்தை விண்வெளியில் நிலைநிறுத்தும்.

20250527192702880.jpg

ஷுபன்ஷு சுக்லா இந்த விண்கலத்தைச் செலுத்த, அமெரிக்​காவின் பெகி வைட்சன் இந்தப்பயணத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார் . போலந்தைச் சார்ந்த ஸ்வாவோஸ்உஸ்னைஸ்​கி​யும், ஹங்கேரியைச் சார்ந்த திபோர் கபுவும் இவர்களுடன் செல்லும் சகஆராய்ச்சியாளர்கள் . இவர்கள் விண்வெளியில் உள்ள சர்வ தேச விண்வெளி மையத்தில்(International Space Station) 14 நாட்கள் தங்கி இருந்து ஆரய்ச்சிகளை மேற்கொள்ளஇருக்கிறார்கள்.

20250527192722468.jpg

அமெரிக்க தனியார் நிறுவனமான அக்ஸியம் , நாசா , இந்தியாவின் இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை அக்ஸியம் 4 எனப்படும் விண்வெளி ஆய்வுதிட்டத்தைச் செயல்படுத்துகின்றன. விண்வெளியில் வேளாண்மை செய்ய ஏதுவான 60 வகைஆராய்ச்சிகளை இக்குழு மேற்கொள்ளும் .

பச்சைப்​பயறு, வெந்தயம் போன்ற குறைந்த காலத்தில் முளைவிட்டு வளரும் தாவரங்களைவித்திட்டு சோதனை செய்யப்​போகிறார்கள் இவர்கள் . மேலும் நெல் போன்ற ஆறு வகைஉணவுப்பயிர் விதைகளை உடன் எடுத்துச் செல்கிறார்கள்.விண்வெளியில் முளை விடவைத்து , அவற்றை இங்கு பூமியில் வளர்க்கும் முயற்சியும் செய்ய இருக்கிறார்கள் .

இந்த சிறப்புமிக்க ஆராய்ச்சியில் ஈடுபட விண்வெளியில் பயணம் செய்யும் இந்திய வீரருக்குநம் வாழ்த்துக்களையும், அன்பையும் தெரிவிக்கிறோம் . பெருமை மிக்க பயணம் முடித்துவெற்றி வீரராக திரும்ப வேண்டுமாறு பிராத்திக்கிறோம்.

20250527192804444.jpeg

ஷுபன்ஷு சுக்லா வைத் பின்பற்றி மென்மேலும் இந்தியர்கள் விண்வெளி பயணம் சென்று ,மனித குலத்துக்கு உதவும் ஆரய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். அரசும் , நமது விண்வெளிகழகமும் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும் .