தொடர்கள்
விகடகவியார்
தராத பேட்டி - மிஸ்டர் ரீல்

20250527170152171.jpeg

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

20250527170456313.jpeg

நீங்கள் ஏன் சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு அலைகிறீர்கள் ?

சமாதானத்திற்கு நோபல் பரிசு பெற்றால் நாங்கள் ஆயுதங்கள் விற்பதற்கான மார்க்கெட்டிங் இன்னும் அதிகமாகும். இது ஒரு பிசினஸ் ட்ரிக் இது எல்லாம் உங்களுக்கு சொன்னால் புரியாது.

ஆனால் அமெரிக்காவின் தாதா இமேஜ் இப்ப இல்ல போல தெரியுதே?

அது உண்மைதான் அமெரிக்கா பற்றிய பயம் போயே போச்சு. பாகிஸ்தான் ராணுவ தளபதியை விருந்துக்கு அழைத்த போது எனக்கு சரிசமமா நீங்க உக்காந்து எல்லாம் சாப்பிடக்கூடாது. நான் சாப்பிட்டு மீந்து போனதை தான் நீங்க சாப்பிடணும் அப்பத்தான் நான் உங்களுக்கு நோபல் பரிசுக்கு சிபாரிசு லெட்டர் தருவேன் என்றெல்லாம் நிபந்தனை விதித்தார்.

அவர் சிபாரிசு லெட்டர் எதற்கு?

இப்ப எல்லாம் அவார்ட் வாங்க சிபாரிசு கடிதம் அவசியம். 13 கவர்னர்கள் மற்றும் 23 கவுன்சிலர்கள் என்னுடைய பெண் நண்பிகள் என்று 13 ஆயிரத்து இருவத்தி எட்டு பேர்கள் எனக்கு நோபல் பரிசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

மோடி உங்கள் நண்பர்தானே அவரிடம் பரிந்துரை கடிதம் கேட்க வேண்டியதுதானே?

கேட்டேன் நான் பஞ்சாயத்து எதுவும் பண்ணல அவங்களே தான் போர் நிறுத்தினாங்க என்று பாண்டு பேப்பரில் எழுதி தர சொன்னார். நான் அப்படி எழுதி தந்தால் அதை மீடியாவில் வெட்டவெளிச்சம் போட்டு காட்டிவிடுவார் மோடி அப்புறம் என் இமேஜ் டேமேஜ் ஆகிவிடும்.

நோபல் பரிசு தருவர்களிடமே இதற்கு என்ன வழி என்று கேட்டு விட வேண்டியது தானே?

கேட்டேன், இந்த ரெண்டு நாட்டு பஞ்சாயத்து போர் நிறுத்தம் இதெல்லாம் பழைய டெக்னிக். தமிழ்நாட்டில் ரொம்ப நாளா ரொம்ப வருஷமா வடகலை தென்கலை சண்டை உச்சத்தில் இருக்கிறது. அவர்களிடம் பேசி சமரசம் செய்து ரெண்டு பேரும் தோள் மேல் கை போட்டுக் கொண்டு இருப்பது போல் ஒரு போட்டோ வாங்கி வாருங்கள் அடுத்த நிமிடம் சமாதானத்திற்கான நோபல் பரிசு உங்களுக்கு தான் என்றார்கள். நான் நியூயார்க்கில் உள்ள பெருமாள் கோயிலில் இது பற்றி விசாரித்தேன் உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்காததற்காக அவர்கள் சொல்லியிருக்கும் சதி திட்டம் இது. வடகலை தென்கலை பிரச்சினையெல்லாம் தீரவே தீராது என்று கோயில் மாமா சொல்லிவிட்டார்.