
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ ராமசந்திரன், துபாய் அனுஷம்
ஸ்ரீ மகா பெரியவா தன் பக்தர்கள் எங்கிருந்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்களை ஆட்கொண்டுவிடுவார் என்பதற்கு உதாரணம் இந்த அபூர்வ அனுபவம். ஒரு பத்திரிகையில் ஸ்ரீ மகா பெரியவாளின் விஜயம் பற்றி படித்த மாத்திரத்தில் அவரை தரிசிக்க வேண்டும் என்று தோன்றி இரண்டு குழந்தையுடன் தம்பதி சமேதராய் அலைந்து திரிந்து சென்று தரிசனம் செய்யும் பக்தி சட்டென உருவானது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
எப்பேர்ப்பட்ட பெரிய படிப்பாளியாக இருந்தாலும், பெரிய பதவியில் இருந்தாலும், பல சாதனைகள் செய்தாலும் அத்தனைக்கும் காரணம் பெரியவா என்று உணரும் விஷயமே பக்தி.
இந்த வாரம் அனுபவம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்

Leave a comment
Upload