தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 32 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250524113246458.jpg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

பேரளம் ஸ்ரீ சுந்தரேசன் மாமா

90 வயது ஸ்ரீ சுந்தரேசன் மாமா தனது 20 வயதில் இருந்து ஸ்ரீ மகா பெரியவாளிடம் தனக்கு உண்டான பல அனுபவங்களை பகிர்வதை கேட்கும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது. ஸ்ரீ மகா பெரியவா எப்படி அத்தனை ஊர்களையும், அங்கிருந்தவர்கள் பெயர்களையும் ஞாபகம் வைத்திருக்கிறார் என்று தோன்றும். ஸாக்ஷாத் அந்த ஈஸ்வரனுக்கு தெரியாதா .

ஸ்ரீ பெரியவாளிடம் சென்றாலே நமக்கு அத்தனை கவலைகளும் சென்றுவிடும்.