தொடர்கள்
வரலாறு
மனைவிக்கு மனம் திறந்த மடல் தந்த சுபான்ஷு – பால்கி

20250526223819484.jpg

படத்தில்….கென்னெடி விண்வெளி ஏவுதளம் வரை சென்று வழி அனுப்பியிருக்கிறார் காம்னா. விண்வெளி கலத்திற்கு போகு முன் இடப்பட்ட கண்னாடி சுவருக்கு வெளியே காம்னாவும், அவருக்கு ஆறுதல் டாடா கூறும் சுபான்ஷு.

ஊரெல்லாம், ஏன்? அகிலமெல்லாமுமே இதைத் தானே பேசிக்கொண்டிருக்கிறது.

ஆக்சியம் 4 ஸ்பேஸ் மிஷன் 25ஆம் தேதி ஜூன் அன்று நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு பூஜ்ஜிய புவிஈர்ப்பு நிலை விண்வெளியில் இயங்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station) அமெரிக்காவின் நாசா நிலையத்தின் முன்னெடுப்பில் அதன் கென்னெடி ஏவுதளம் 39Aவிலிருந்து புறப்பட்டது. இந்த 4 பேரும் மொத்தம் 14 நாட்கள் அங்கு தங்கி 60 பரிசோதனைகளை மேற்கொள்வார்கள்.

இந்த விண்வெளி பயணம் இந்திய வரலாற்றில் ஒரு பெரிய மைல்கல் தான். இந்த பயணத்தில் இடம் பெற்ற சுபான்ஷு ஷுக்லா தான் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் ஆவார்.

விண்கலம் கிளம்புமுன் தனது இந்த பிரயாணத்திற்கு உதவியவர்களை நினைவு கூர்ந்து நன்றி கூறினார். அதிலும் முக்கியமாக தனது மனைவி காம்னாவிற்க்கு ஸ்பெஷலாகவே. தனது இன்ஸ்டகிராமில், ஸ்பெஷல் தேங்கஸ் காம்னா!!! நீ ஒரு அற்புதமான கூட்டாளியாக இருப்பதற்கு சிறப்பு நன்றி. நீங்கள் இல்லாமல், இது எதுவும் சாத்தியமில்லை, ஆனால் மிக முக்கியமாக, இதில் எதுவும் முக்கியமில்லை," என்று நன்றி தெரிவித்துக் கூறிக்கொண்டார். இது இணைய தளத்தின் இதயத்தை ரொம்பவே இளக வைத்துவிட்டது.

20250526223756396.jpg


இந்தியாவின் இந்த முயற்சி விரைவில் சந்திரனில் இந்தியர் ஒருவர் இறங்கிட வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.