முதல் இன்னிங்க்ஸ் : ஓப்பனிங்க் பேட்ஸ்மேன் நூற்றுக்கும் அருகில் பார்ட்னர்ஷிப் பண்ணியது. மனம் குளிர்ந்தது. இருக்காதா பின்ன? ரோஹித்தும் இல்ல விராட்டும் இல்ல.
நானூற்று ஐம்பதுக்கும் மேல ரன்கள் குவிப்பு. கிட்டத்தட்ட ஐந்நூற் கிட்ட வந்துவிட்டது. மனம் குளிர்ந்தது.
மூவர் சென்சுரி அடித்தது. மனம் குளிர்ந்தது.
கேப்டன் கில் கில்லி மாதிரி ஆடி சென்சுரி அடித்தது. மனம் குளிர்ந்தது.
விக்கட் கீப்பர் ரிஷப் பந்த்தின் அதிரடி ஆட்ட சென்சுரியும் அதைத் தொடர்ந்து அவர் அடித்த ரிவர்ஸ் குட்டிகரணம் யாரால் மறக்க முடியும்? பார்த்தவரெல்லாம், பார்த்தவாரே மறத்துப்போயினர். வாயடைத்துப் போயி ஆச்சர்யத்தில் உறைந்து போயினர். மனம் குளிர்ந்தது. அவரது ஐபிஎல் அணியின் பாஸ் சஞ்சிவ் கோயங்காவும் மனம் குளிந்துதான் விட்டார் என்ற செய்தியும் கிடைக்கிறது.
ஆனா, அது என்ன? 447 ரன்களை ஐவர் அடித்துக் கொடுத்தனர். அதில் மூவர் அடித்தனர். இருவர் ஜீரோவில். மீதமுள்ள முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோரான 24 ரன்களுக்கு அடுத்த் ஐந்து விக்கட்டுக்களை இழக்கிறது. என்னமோ, சொல்ல்வார்களே!!! ஐந்து வாங்கினால் ஐந்து ஃப்ரீயா. இது முதல் காரணம் தோற்றுப்போனதற்கு. அங்கு தன்னுடைய வால் தன்மையின்மையை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்துவிட்டது. இத்தனைக்கும் இரண்டு ஆல்-ரௌண்டர்களின் பங்களிப்பு என்ன? அவர்களின் பௌலிங்க் கூட சொல்லும் படியாக இல்லையே.?
இதில் இன்று கவாஸ்கர், “டீமில் சிலருக்கு முடிந்தால் ப்ராக்டீஸ் பண்ணலாம் என்பது வீழ்ச்சிக்கு காரணமாகிவிடக்கூடாது” எச்சரித்திருக்கிறார்.
நான் ஒரு படி மேலே சென்று சொல்கிறேன். ஐம்பது பந்துகளாவது பௌலர்ஸ் பேட் பிடித்து ஆடத் திராணி உள்ளவர்களாக ஆகும் வரை ப்ராக்டீஸ் கொடுக்கணும். அதிலும் அவுட்டாகாமல் இருக்கணும் என்ற கொசுறு கண்டிஷனுடன். இந்த கண்டிஷங்களில் தேர்ந்தவர்கள் தான் மேட்ச் ஆடுவார்கள் என்று சொன்னாலாவது திருந்த வாய்ப்புண்டு. இதில் பூம்ராவிற்கு விதி விலக்கு கொடுக்கலாம். பேட்ஸ்மேன்லாம் குறந்தது 100 பந்துகளாவது அவுட்டாகாமல் பயிற்சியில் திறம் காட்டினால் தான் நல்லது. கௌதம் கம்பீர சார், நோட் பண்ணுங்க. கண் கொத்தி பாம்பாட்டம் கண்ணுல விளக்கெண்ணை போட்டுட்டு விசில் ஊதுங்க.
கூடவே, கேட்சிங்க் ப்ராக்டீஸ்ல கூட கெடுபிடி பண்ணுங்க. கேட்ச் போச்சின்னா மேட்ச் போச்சி.
பூம்ரா இல்லைனா நம்ம கதி அதோ கதி தான்.
இங்கிலாந்து ஈஸியா நாம எடுத்த ஸ்கோருக்கு இணையா வந்துட்டதே.
இரண்டாம் இன்னிங்க்ஸ் : சென்சுரி அடிச்சிட்டாரே குட்டிகரணம் போடுவாரோ என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமா இருந்தது அனைவருக்கும். கவாஸ்கரும் பால்கனியிலிருந்து சமிக்ஞ்சை வேறு காண்பித்தார். அடுதத் வாட்டி என்று கை ஆட்டிவிட்டார் பந்த்.
இப்ப ஒரு புது தடங்கல். எடுக்கும் ரன்களை ஏன் அவ்வளவு விரைவாய், t20 ஸ்கோர் மாதிரி எடுக்கணும்?
இதிலிருந்தே தெரிகிறது, இவர்கள் இன்னும் ஐபிஎல் மனத்திலிருந்து இன்னும் வெளி வரவில்லை என்று? இது ஒரு வித சால்ஜாப்பு தான். பொளேர்னு சொல்லணும்னா, டெஸ்ட் மேட்ச் ஆடும் முறை தெரியாதவர்கள் என்று தான் உரக்க சொல்லணும். எடுத்த ரன்களை நன்றாக மெதுவாக டைம் எடுத்துக்கொண்டு நான்காம் நாள் முடிவில் அவர்களை ஆடத் தந்திருந்தால் கொஞ்சம் நன்றாயிருந்திருக்கும்.
அந்த மைதானத்தின் குணமே பேட்ஸ்மேனுக்கு ஒத்து என்பது தெரிந்திருந்தும் ஒரு யுத்தியே இல்லாமல் ஆடியது நம்மவர்களது கத்துக்குட்டித்தனத்தை அழகாக காண்பித்துவிட்டது.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கூற்றை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். மேனேஜ்மெண்ட் யுத்தி படி, SWOT அனாலிஸிஸ் செய்து ஆட்டத்தை துவக்க வேண்டும். அதாவது நமது ஸ்ட்ராங்க் பாயிண்ட் என்ன?, வீக் பாயிண்ட் என்ன?, கிடைக்கும் சந்தர்பங்கள் என்னென்ன? அச்சுறுத்தல் பாயிண்ட் என்ன என்பது தான் அந்த SWOTடுக்கான அர்த்தம்.
செஷனுக்கு செஷன் நம்து யுத்தியை ஆராய வேண்டும். ஏன்!! ஒவருக்கு ஓவர் கூட யுத்தியை சரி பார்க்க வேண்டும். இதை பேட்டிங்க் பௌலிங்க் என்ற இரு நிலைகளிலும் ஏற்றுகொள்ளவேண்டும்.
நம்மவர்களுக்கு, இந்த மாதிரி டெஸ்ட் மேட்சில் டிரா என்ற ஒரு ஆயுதமும் உண்டு என்பது தெரியுமா என்பதே தெரியவில்லை. இவர்கள் ஆடிய ஆட்டத்தை வைத்தே நாம் யூகிக்கமுடிந்தது.
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ஊத்திகிக்சே ரிசல்ட்.
அடுத்த பர்மிங்காம் டெஸ்ட்டில் மூவராவது புதியவராக வருவார்கள் என எதிர்பார்க்கணும். 0-1 நிலை 1-1 ஆகிட நமது ஆசையும் வாழ்த்துகளும்.
Leave a comment
Upload