உறங்கினேன்...வியந்தேன்...!
கனவு காணும் போது...
விழி... மையினை உணர்ந்தேன்....!
மை... விழியினைக் கொணர்ந்தேன்....
ஆம்... நான் கனவு காண்பதே...
நின் விழிகளால்...!!
நான் காண்பது...
எந்தன் கனவா...??!!
உந்தன் கனவா...??!!
அறியவில்லை...
அறிய விழையவில்லை...!!
உண்டேன்... சுவைத்தேன்...!
தேன் சுவையினை...ருசித்தேன்...!
கேட்டேன்... நின் மென்குரலையே...
கேட்கிறேன்...! செவித் தேன்...!
சுவாசிக்கிறேன்...!!
நின் சுவாசத்தையே...
நின் வாசத்தையே... நுகர்ந்தேன்...!
நின் வதனம் கண்டே...
வசிக்கிறேன்...!
வாசிக்கிறேன்...!!
உச்சிதனை முகர்ந்தேன்...!!
நான்... நான்.. தானா...??!!
அல்ல... நீயே தானா...??!!
நான்.. நீயாகிப் போன நானா...?!
நானாகிப் போன... நீயே..தானா..?!
அறியவில்லை...
அறிய விழையவில்லை...!!
எந்தன் கனவு...
நின் விழியின் வரவு...!!
Leave a comment
Upload