கார்த்திக் சித்ராவிடம் சொல்லியபடி அந்த பிரபல மாலில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்கு மாலை ஐந்து மணிக்கே வந்து விட்டான். ஆனால் சித்ரா தான் இதுவரை வந்து சேரவில்லை.இப்போது மணி 6 ஆகி விட்டது.
’சரி.புறப்படலாம்’என்று அவன் முடிவு செய்த போது, சித்ரா வந்து சேர்ந்தாள். இவனை சரியாக அடையாளம் கண்டு, சித்ரா அவனுக்கு எதிரில் காலியாக இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.
ஃபோட்டோவில் சிவப்பாக இருந்த சித்ரா, நேரில் ஏன் கருப்பாக இருக்கிறாள்? அவனுக்கு சிவப்பாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளத்தான் ஆசை. கார்த்திக்குக்கு தான் மிகவும். கருப்பாக இருப்பதைப் பற்றி எப்போதும் மிகுந்த கவலை உண்டு. தனக்கு பிறக்கும் குழந்தையாவது சிவப்பாக இருக்க வேண்டும் என்பது அவனது ஆசை. அவனது ஆசை இப்படி இருக்க, இப்பொழுது வந்திருக்கும் சித்ரா இவனை மாதிரியே கருப்பாக இருந்ததுதான் அவனுடைய அதிர்ச்சிக்கு காரணம்.
’டீ சொல்லவா? காஃபி சொல்லவா? ’என்று அவனைக் கேட்டாள் சித்ரா. அவன் அமைதியாக இருக்கவே, வெயிட்டரிடம் காஃபி இரண்டை கொண்டு வரச்சொன்னாள் சித்ரா.
கார்த்திக் தொடர்ந்து அமைதி காக்கவே,சித்ராதான் பேச்சைத் துவக்கினாள்.’வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகம். அதனால்தான் வருவதற்கு நேரமாகி விட்டது’ என தனது தாமத வருகைக்கு அவன் கேட்காமலேயே அவள் வருத்தம் தெரிவித்தாள்.
’என்ன ஒன்னும் பேச மாட்டேங்கிறீங்க? நீங்க கார்த்திக் தானே? நீங்கதானே வரச் சொன்னீங்க? என்னை நேரில் பார்த்ததும் மௌனம் காப்பதன் காரணம் எனக்கு புரியவில்லை. ? என்று வெளிப்படையாக அவனைக் கேட்டாள் சித்ரா.
எனக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. உங்கள் ப்ரொஃபைலையும்,ஃபோடோவையும் பார்த்த உடனே நான் தான் ஓ.கே. சொல்லி விட்டேனே?நீங்கள் தானே நேரே பார்க்க வேண்டும். பேச வேண்டும்.’ என்றெல்லாம் மெசேஜ் அனுப்பினீர்கள். அதனால்தான் நான் வந்திருக்கிறேன்.’ என்று சொல்லி முடித்தாள் சித்ரா.
கார்த்திக், மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ’அது வந்து…… நீங்க போட்டோவில் சிவப்பாக இருந்தீங்க. நேரில் பார்த்தால் இவ்வளவு கருப்பாக இருக்கீங்களா? அதைத்தான் யோசிக்கிறேன்.’ என்று சொன்னான்.
’நீங்களும் கருப்பாகத்தான் இருக்கீங்க..எனக்கு உங்களை விட படிப்பும், வருமானமும் அதிகம்.இருந்தாலும், என்னுடைய மனநிலையை நீங்கள் புரிந்து கொண்டு, என்னை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று நான் நம்பினேன்.’ என்றாள் சித்ரா
.’எந்த மணப்பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு தன்னுடைய ஃபோட்டோவை அனுப்பும் பொழுது, ஒப்பனை செய்து கொண்டு அனுப்புவதுதான் வழக்கம். அப்படித்தான் நானும் அனுப்பினேன். அதில் நான் கொஞ்சம் சிவப்பாக இருக்கிறேன். இதில் என்னுடைய தவறு ஒன்றுமே இல்லையே.
வந்த இரண்டு ஃகாபிக்கும் பணத்தினை கொடுத்துவிட்டு கிளம்ப முற்பட்டாள் சித்ரா.
தன்னுடைய தவற்றை புரிந்து கொண்ட கார்த்திக் அவளை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினான். ஆனால் சித்ராவோ ’உங்களுக்கு என்னை திருமணம் செய்து கொள்ள ஒரு விழுக்காடு கூட விருப்பம் இல்லை. எனது கருப்பு நிறம் காலம் முழுவதும் நம்முடைய திருமணத்திற்கு பிறகும், உங்கள் மனதில் ஓர் உறுத்தலாக இருக்கும். இதை தொடக்கத்திலேயே தவிர்ப்பது நல்லதுதான்.’
’ சரி. எனக்கென்று ஒருவன் அவன் கருப்பா? சிவப்பா? அது பற்றி எனக்கு கவலை இல்லை. என்னை மனதார விரும்பி மணந்து கொள்ளும் அந்த ஜீவனுக்காக நான் காத்திருக்கத் தயாராயிருக்கிறேன்..ஆனால் கருப்புதான் எனக்கு பிடித்த கலரு’என்று சொல்லிக் கொண்டே அவனுடைய பதிலுக்குக் கூட காத்திருக்காமல் புறப்பட்டாள் சித்ரா.
கார்த்திக்கு இப்போது தன்னுடைய நிறமே பிடிக்கவில்லை.
Leave a comment
Upload