தொடர்கள்
கதை
ஆசை – சிறுகதை - பா.அய்யாசாமி

20250505083649757.jpg


சிவம் பூங்கா.. நடைப்பயிற்சியில் இளையவர்கள், அன்பை பறிமாறும் காதலர்கள், காலத்தைக் கடந்த வயதானவர்களை மட்டும் தாங்கியிருக்கவில்லை அனைவரின் சுமைகளையும் தாங்கியபடி அன்றைய பொழுது விடிந்திருந்தது.. சாம்பு என்கிற மூர்த்தி வங்கியிலிருந்து பணி ஓய்வுப்பெற்ற பின்பு துனைவியை இழந்து இரண்டாவது மகனுடன் அசோக்நகரில் வாசம் செய்து வருபவர்,. தினம் வரும் தமது நண்பர் சாலிகிராம சேதுவை கண்டதும் வா.. வா ...சேது என ஆர்வமானார்.
நீ ஏன் இத்தனை ஆர்வமாக என்னை வரவேற்கிறாய் புரியரது.. என கிண்டல் செய்த சேதுவிற்கும் அதே வயதுதான் தனியார் கம்பெனி ஒன்றில் ஓய்வுப்பெற்று மனைவியுடன் தனியாக வசிப்பவர். பிள்ளைகள் இல்லை அது ஒரு கவலையாகவும் இல்லை அவருக்கு, ஏனெனில் பிள்ளைகளுடன் இருக்கும் அவரது நண்பர்கள் சொல்லும் மற்றும் படும்பாட்டை நினைத்து தமக்கு வாரிசு இல்லாமல் போனதை நினைத்து நிம்மதியடைந்தவர்.

அட்ரஸ் கிடைச்சுதா ?! என கேட்டார் மூர்த்தி மெதுவாக.. இல்லை,....என்றவர் இருக்கு என கண்ணடித்தார்... ரொம்ப சிரம பட வேண்டியதாகப் போச்சு, பத்திரிக்கை நண்பர் ஒருவர்தான் கொடுத்தார்

அவர் அடிக்கடிப் போவாராம், நான் அங்கே வருவதை சொல்லிவிடுகிறேன், நீங்கள் போய் பாருங்கள் ஆனால் அவர்கள் விரும்பினால்தான் நீங்கள் எதிர்பார்க்கிறது நடக்கும் என சொன்னதையும் கூறினார் சேது
எங்கே கொடு என்றார் சாம்பு. கொடுத்தால் போதுமா.. கூட நான் வர வேண்டாமா என கேட்டதும்..
நீ இல்லாமலா,நான் தனியாகவெல்லாம் அங்கே போகமாட்டேன் நீயும் வரணும் என்றதும்.

பின்னே என்ன ? இன்றே சாயந்திரம் 7.30 மணிக்குமேல் போவோம் என்றார் சேது
7.30 மணிக்கா, வீட்டில்மகன் மருமகள் பெயரன் எல்லார்கிட்டேயும் என்ன சொல்வேன் என கவலைக் கொண்டார் சாம்பு.
யோவ்! நீ என்ன லவ் பண்ணவா போறே ? ஒரு நாள் தானே போகப்பேறே இத்தனை யோசிக்கிறதுக்கு, கோவிலுக்கு போறேன்னு பொய் சொல்லிவிட்டு வா என்றார்.
பொய்யா ?! பெயரன் நானும் வரேன்னு சொல்லிவிட்டால்...?!

ஏதையாவது சொல்லி விட்டுட்டு வா என்றார் சேது..

அவன் விட்டாலும் மருமக தனியா விடமாட்டடா துனைக்கு போகச்சொல்லி அனுப்பிடுவா. என்றவர் ... ஒன்று செய்

நீ வந்து என்னை வண்டியிலே அழைச்சுண்டு போயேன் அப்போது யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்றார் சாம்பு.

ஆமாம் இது ஒன்றுதான் நான் செய்யலை,நாளை பின்னே ஏதாவது பிரச்சினை வந்தால் நான்தான் அழைச்சுண்டு போனேன்னு சொல்லி தப்பிச்சுண்டுடுவாயில்லே நீ அதானே! என்றார் சேது.

சீ சீ அப்படியெல்லாமில்லை என்றார் சாம்பு வெட்கத்துடன்..

சரி நானே வருகிறேன் ரெடியா இரு என்றாலும்
சேய்! என்ன மனசு இது ? ஒரு பக்கம் தப்புங்கிறது இன்னொரு பக்கம் ஆசையா இருக்கோன்னோ, போய் பாரு என்கிறது இந்த இரண்டிற்கும் நடுவில் நான் படுகிறபாடு இருக்கே ? என சாம்பு மனத்திற்குள் நினைத்தபடி நடந்தார் வீட்டிற்கு.

வீட்டிற்கு வந்தபோது பெயரனும் மகன் சுந்தரும் கிளம்பிக் கொண்டியிருந்தார்கள்.
என்னப்பா வாக்கீங் முடிஞ்சுதா? சேது மாமா ஏதாவது கொடுத்தாரா என சுந்தர் கேட்டதும், பதறிப் போனார் சாம்பு
என்ன ? கொடுத்தார் என தழுதழுத்தார்..
ஏதாவது செய்திதான்பா, நல்லா அரசியல் பேசுவாரே அதான் கேட்டேன், என்ற சுந்தர் புறப்பட்டுவிட்டான்.
அப்பாடா! என பெருமூச்சு வாங்கிய சாம்பு தனது அறைக்குள் புகுந்து கொண்டார்.
மனைவியின் புகைப்படம் சுவற்றிலிருந்து அவரை முறைத்தது
இத்தனை வயசுக்கப்புறம் இது தேவையா ?! என அவள் கேட்பது போலிருந்தது.

வயசு என்ன செய்யும் ? இது உடல் உணர்வு சம்பந்தப்பட்டது.
நீ இருக்கும் வரை ஒரு கவலையும் இல்லை, நீ மணமாகி வருவதற்கு முன்னேயே இருந்து எனக்கு அவளைத் தெரியும், ஆசையாக இருக்கு ஒரு எட்டு நேரிலே பார்க்கனும்னு தோன்றது. நீ இருந்தால் என்னை தனியாக போகவிடுவாயா ? தப்பு ஒன்னுமில்லை என தேற்றினாலும், பயந்து பயந்து போயாவது பார்க்கனுமா மகன் மற்றும் மருமகளுக்கு தெரிந்தால் அசிங்கமாக போயிடுமே என அறிவு வந்து பயமுறுத்த, செயித்தது என்னவோ ஆசைதான், மறைத்து வைத்தியிருந்த அவளது பழைய போட்டோவை எடுத்து பார்த்து என்ன அழகு ! என்ன அழகு! என்றார்.

மாலை மணி, 6.00 ஆனது, இவரது மனமும் மகிழ்ச்சியில் ஆறானது. குதுகுலமாக ஒரு வித படபடப்பு, அடி வயிற்றில் ஒரு அழுத்தம் ஏதோ தப்பு காரியம் செய்யும் போது ஏற்படும் பாருங்க அப்படி.
சேது வந்ததும், மாட்டுபொண்ணே ! மாமாவை கோவிலுக்கு அழைச்சுண்டு போறேன் என்றார்.

எந்த கோவில் ?
ம்.. ம் வடிவுடைநாயகி என்றார்.
அவ்வாறு சேது கூறியதும் சாம்புவிற்கு வியர்த்தது.
ஓ திருவொற்றியூரா ? ஓகே ஓகே என்றாள் மருமகள்.
சாம்பு இழுக்காத குறையாக சேதுவை இழுத்துக்கொண்டு ஓடியவர்

நீயே உளறிடுவாய் போலிருக்கு வா என்றார்.

ஏனைய பதறுகிறீர் ? வடுவுடைநாயகினு உண்மையைத்தானே சொல்கிறேன் என்ற சேது காலையில் காண்பித்த விலாசத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பினார்கள்.

வீடு நல்ல விசாலமாக இருந்தது வாசல் "லட்சுமி" என கிராணைட் கற்களில் பதிக்கப்பட்டிருந்த்தைக் கண்ட சாம்புவிற்கு கால் தரையில் பதியவில்லை, வயிற்றை கலக்குவது போலிருந்தது உடலில் ஒரு வித உஷணம் ஏறியிருந்தது. முதல் முறையாக பிரிதொரு மகளிரைத் தேடி வந்திருக்கின்றோம் என்ற குற்ற உணர்ச்சி சேர்ந்துக்கொள்ள சேதுவிடம் "வேண்டாம் வா சேது" வாசலோட போயிடலாம் என்றார் சாம்பு.

என்ன போறதா ?! உனக்காகத்தான் நான் வந்தேன், எனக்காக வரவில்லை என்ற சேது இதிலென்ன இருக்கு ? எல்லோரும் வாய்ப்பு கிடைக்கும் போது செய்யறதுதான் உனக்கு இப்போதான் அந்த வாய்ப்பு கிடைச்சியிருக்கு, வா என வீட்டின் உள்ளே அழைத்துப்போனார்.

அங்கே இருந்தவர் கார் டிரைவராக இருக்க வேண்டும், இவர்களை பார்த்து சிரித்தபடி, வாங்க என வீட்டினுள் அழைத்துப்போனார்.

அப்படியொரு ஒரு அமைதியான சூழல்,நடராசமூர்த்தி தனது இடது காலைத் தூக்கியபடி.... கீழே முயலகனுக்கு பதில் தானே கிடப்பதாக கற்பனை சாம்புவின் கண் முன்னே வந்துப் போனது.

ஒருவித வாசனை அறை முழுக்க பரவ, அரக்கு நிற சேலைக்கட்டிய உருவம் மாடிப் படிகளில் இருந்த இறங்கி இல்லை... இல்லை மிதந்து பறந்து கீழே வந்தது வடிவுடையம்மனே இறங்கியது போலிருந்தது சாம்புவிற்கு.

அம்மா! பத்திரிக்கையாளர் மோகன் சார் போன் செய்திருந்தாரே அது நாங்கள்தான் என்று சேது அறிமுகம் செய்ததும்,

ஓ. அது இவர்தானா ? என்று சாம்புவை ஊடூருவிப் பார்த்தார் லட்சுமியம்மாள்

சாம்புவிற்குத்தான் இன்னும் நம்ப முடியவில்லை, 70 களில் இருந்து பார்த்துப் பார்த்து ரசித்த வியந்த, திரைப்படநாயகி லட்சுமி் முன் தான் நிற்கின்றோம் என்பதை

திருமணத்திற்கு பின் இருவருக்கும் பிடித்த நாயகி என்பதால் ஒரு படங்கூட தவறாமல் பார்த்ததையும், தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது மனைவியின் ஆசை, அவர் இறந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டதை கூறிய சேது தங்களை சந்தித்துவிட்டாலே போதும்

என் மனைவியின் ஒரு ஆசையாவது பூர்த்தியாகட்டும் என்ற நம்பிக்கையில் வந்துள்ளேன் என்று கூற,

முன்னாள் கதாநாயகி மகாலட்சுமியின் கண்களில் நீர் கோர்த்தியிருந்தது கிளிசரின் இல்லாமலேயே !