தொடர்கள்
கவர் ஸ்டோரி
வட இந்தியாவில் முருகன் – பால்கி

20250527175737820.jpg

[கிரௌஞ்ச மலை கார்த்திக் மந்திர்]

வட இந்தியாவில், முருகனை 'ஸ்கந்தன்' அல்லது 'கார்த்திகேயன்', குமாரா, ஷண்முகா, என்று அழைக்கிறார்கள்.

கிடைக்கும் பதினெண் புராணங்களுக்குள் மிகவும் பெரியது ஸ்கந்த புராணம் தான்.

குப்த பேரரசின் அமைச்சருள் மாணிக்கமாம் மஹா கவி காளிதாஸன் முருகக் கடவுளின் மீது இயற்றிய ஒப்பற்ற காவியம் தான் குமார சம்பவம் என்பது.

ஒரு பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை முருகனின் வழிபாடு வடக்கே அபரிதமாகத்தான் இருந்தது. ஆதி சங்கரரும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னமே நமது பாரத தேசத்தை கால் நடையாகவே சென்று ஷண்மதம் என்ற பிரிவுகளை ஏற்படுத்தினார் அதில் ஒன்று தான் கௌமாரம், அதாவது, முருக வழிபாடு என்பது.

தேவர்களின் சேனபதி என்ற ஒரு பெயரும் முருகனுக்கு உண்டு. சூர பதுமன் என்னும் அரக்கனால் தேவ லோகம் இழந்த இந்திரனுக்கு அந்த அசுரனை வதம் செய்து அந்த லோகத்தை மீட்டுத் தந்தார். தனது மகள் தேவயானியை முருகனுக்கு மணம் முடித்து தந்தார். தனது வெள்ளை யானையான ஐராவதத்தையே தந்தார்.

பொதுவாகவே, வடக்கே கார்த்திக்கேயன் பிரம்மச்சாரியாக கருதப்படுகிறார். அதனாலேயே இந்த கோயில்களுக்கு பெண்கள் சாதாரணமாக வருவது இல்லை. அவரது அண்ணன் பிள்ளையாருக்கு ரித்தி சித்தி என இரு மனைவியர் உண்டு இங்கு.

மஹாராஷ்ட்டிராவில் முருகன் கோயில்கள்:

20250527175609263.jpg

புனேக்கு அருகில் தேஹு ரோட் என்னுமிடத்தில் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி கோயில் சங்கர்வாடி எனும் புராதன மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. விட்டலனின் பிரசித்தி பெற்ற பக்தன் சந்த் துக்காராமின் புனித காலடி இந்த கோயிலுக்கு உண்டு என்று இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். 1975ல் இந்த கோயிலை மக்கள் புனருத்தாரணம் செய்துள்ளனர். அதன் பிறகு இங்கு தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

20250527175637495.jpg

கார்த்திக் ஸ்வாமி கோயில் நாசிக். இது கோதவரி நதிக்கரையில் 1867 நிறுவப்பட்டது. நமது தமிழகத்தில் எப்படி முருகனுக்கு பண்டிகைகள் கொண்டாடுகிறோமோ அந்த தினங்களில் இங்கும் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.

20250527175705575.jpg

இமயமலைப் பகுதியில் கிரவுஞ்ச மலை மீது கார்த்திகேய சுவாமி கோயில் உள்ளது. கூடுதலாக, உத்தராகாண்ட் மாநிலத்தில், கார்த்திகேய சுவாமிக்கான ஒரு கோயில் உள்ளது, இது இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது.

20250527175847627.jpg

12,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது அந்த மாநிலத்தில் ருத்திரப்ப்ரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கோயில்.

நாரதர் கலகத்தில் கதை ஆரம்பிக்கிறது. உலகை யார் முதலில் சுற்றி வருகிறாரோ அவருக்கே மாங்கனி என்றிட, பிள்ளயார் தாய் தந்தையே உலகு என்று கூறி அவர்களை வலம் வந்து மாங்கனி பெற்றுக்கொள்கிறார். மயில் வாகனம் மீது நிஜமாகவே உலகை சுற்றி வந்த முருகனுக்கு இந்த முடிவு கோபம் விளைவிக்கவே, இங்கு சொல்லப்படும் புரணத்தின் படி, தன் உடலின் சதைகளைஅழித்துக்கொண்டு எலும்புடன் இங்கு வந்து உடலை வருத்தி கடும் தவம் புரிந்ததாகவும், அதைக்கண்ட பெற்றோர் அவரை இங்கு வந்து சமாதானம் செய்ய, அவரும் தென்னகத்தே தமிழகத்தில் குடி புகுந்தார் என்கிறார்கள்.

மும்பையில் திருச்செம்பூரில் முருகன் கோயில் உள்ளது. இது பற்றி அறிய இதனை பற்றி நாம் எழுதிய கட்டுரையின் கீழ்கண்ட லிங்கை சொடுக்கி அறியவும்.

https://www.vikatakavi.in/magazines/258/9470/sembur-murugan.php

தமிழரின் கடவுளாம் முருகனுக்கு அரஹரோஹரா.