
பல வாரங்கள் பறந்து, பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் கடந்து வந்த இரண்டு இடம்பெயரும் பறவைகள் — வெள்ளை வயிற்றுக் கடல் கழுகு (White-bellied Sea Eagle) மற்றும் கிரேட்டர் சாண்ட் பிளோவர் — முதல் முறையாக பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் தங்கியுள்ளன.

இதன் மூலம், அந்த சதுப்புநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பறவை இனங்களின் எண்ணிக்கை 202 இலிருந்து 204 ஆக உயர்ந்துள்ளதாக சென்னை மாவட்ட வன அலுவலர் வி.ஏ.சரவணன் தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளை வயிற்றுக் கடல் கழுகு அரிதாகக் காணப்படும் இனமாகும். இது கடைசியாக சென்னை கடற்கரைப் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கப்பட்டதாக பறவை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பெரிய பகல் நேர வேட்டைப் பறவை, கடற்கரையிலிருந்து 650 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு புலிகள் காப்பகத்திலும் அண்மையில் காணப்பட்டதாக தகவல் உள்ளது.
பள்ளிக்கரணை சதுப்புநிலம் இரண்டு வகையான வேட்டைப் பறவைகளை ஈர்க்கிறது. ஆண்டு முழுவதும் காணப்படும் வசிக்கும் (resident) இனங்கள் மற்றும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை வருகை தரும் பருவகால வலசைப் பறவை இனங்கள்.

இங்கு வாழும் எட்டு வேட்டைப் பறவைகளில் (resident ones) கருப்பு தோளுடைய கைட், ஷிக்ரா, கிழக்கு தேன் கழுகு, வெள்ளை கண் கழுகு, குறுகிய விரல் பாம்பு கழுகு, சாதாரண கழுகு, புள்ளியிட்ட ஆந்தை மற்றும் பண்ணை ஆந்தை ஆகியவை அடங்கும்.
இங்கு வருகை தரும் இடம்பெயரும் வேட்டைப் பறவைகளில் பெரிய புள்ளியிட்ட கழுகு, பெரிக்ரைன் ஃபால்கன், இந்திய புள்ளியிட்ட கழுகு, மேற்கத்திய சதுப்பு ஹாரியர் மற்றும் ஓஸ்ப்ரே ஆகியவை உள்ளன.
நேச்சர் டிரஸ்ட்டைச் சேர்ந்த கவுதமன் கணேசன், பள்ளிக்கரணையில் வேட்டையாடும் மேற்கத்திய சதுப்பு ஹாரியர் ஊதா நீர்க் கோழியை (Purple Moorhen) வேட்டையாடுவதை படம் பிடித்துள்ளார். இந்த சதுப்புநிலத்தில் வேட்டைக்கான வளமான உணவுத் தளம் இருப்பதை இம்மாதிரியான பறவைகள் உறுதிப்படுத்துகிறது.

பல நிலப்பறவைகள் கடுமையாகக் குறைந்து வரும் நிலையில், பள்ளிக்கரணையில் வேட்டைப் பறவைகளின் எண்ணிக்கை நிலையாக இருப்பதாக அவர் கூறினார். சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN), மேற்கத்திய சதுப்பு ஹாரியர், பெரிக்ரைன் ஃபால்கன் மற்றும் ஓஸ்ப்ரே ஆகியவற்றை ‘குறைந்த கவலை’ இனங்களாகவும், இந்திய புள்ளியிட்ட கழுகை ‘அபாயத்திற்கு அருகிலானது’ என்றும், பெரிய புள்ளியிட்ட கழுகை ‘அபாய நிலை’ என்றும் வகைப்படுத்தியுள்ளது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக பள்ளிக்கரணை வேட்டைப் பறவைகளை கண்காணித்து வரும் நேச்சர் டிரஸ்ட் கவுதமன் கணேசன்: “செழித்து வளரும் வேட்டைப் பறவை இனங்கள், குறைந்த மனித இடையூறு மற்றும் மாசற்ற பாதுகாக்கப்பட்ட வாழ்விடத்தை குறிக்கின்றன,” என தெரிவித்தார்.

இந்தக் காணிப்புகள், நகர்ப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் கூட பள்ளிக்கரணை ஒரு முக்கிய உயிரிசை மையமாகத் திகழ்வதை உறுதி செய்து, சென்னை நகரின் வனவிலங்கு தாங்குத்தன்மைக்கு நம்பிக்கை அளிப்பதாக அவர் கூறினார்.

Leave a comment
Upload