
யவனராணி, கடல்புறா, போன்ற நாவல்களை எழுதிய எழுத்தாளரான திரு.சாண்டில்யன் அவர்களை தெரியாதவர்
யாரும் இருக்க முடியாது.
இவரை எப்போது சந்திக்க நினைத்தேன் என இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.
ஆமாம் 1965-66களில் வாலாஜாபாத் டவுனில் வா.தி.மாசிலாமணி பள்ளிக்கூட மாணவனாக இருந்த போது பள்ளி நூலகத்தில் படிக்கப் போய்வர, யவனராணி படித்து முடித்தவுடன்அவரை சந்திக்க எண்ணினேன்.
அதற்கான நேரம் கிடைத்தது.
1977ல் ஒரு நாள் மாம்பலம் சிவாவிஷ்ணு கோயில் போய் விட்டு வந்த சமயத்தில் அங்குள்ள அலுவலக ஊழியர் மூலமாக சிவா விஷ்ணு கோயில் நிர்வாகிகளை சந்திக்க நேர்ந்தது.
அங்கிருந்த மேனேஜர் ஆக இருந்த ஒருவர் மூலமாக, எண் 17, மஹாலஷ்மி தெரு தி.நகரில் திரு.சாண்டில்யன் வசிக்கும் இடம் எனவும் தெரிய வந்தது. சிவா விஷ்ணு கோயில் எதிரே உள்ள தெரு இது. அவரை அடிக்கடி சந்தித்து பேசும் பாக்கியம் கிடைத்தது.
அந்த சமயத்தில் தான் அவர் எழுதிய குடும்ப நாவல் பற்றிய விவரம் சொல்ல, அந்த புத்தகம் வாங்கிவந்தேன்.
1977ல் மேற்கு மாம்பலம் பகுதியில் ஒருவர் புஸ்தகாலயா என்ற பெயரில் தனியார் நூலகம் ஆரம்பிக்க, அதன் துவக்க விழாவிற்கு வந்த சாண்டில்யன் அவர்களுடன் பேசி பிறகு அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினேன்.
என் சொந்த பெயரான பாஷ்யம் அய்யங்கார் என கையெழுத்து போடுகிறேன் என்றதும் வேண்டாம் புனைபெயரான சாண்டில்யன் என்றே போடச்சொல்லி வாங்கிய ஆட்டோகிராப் தான் மேலே உள்ளது.

Leave a comment
Upload