தொடர்கள்
ஆன்மீகம்
தினந்தோறும் பிரபந்தம் சென்னி பதிகம் டாக்டர் வெங்கடேஷ் தொகுப்பு

20240724100750916.jpg

தமிழ் மொழியை பல்லாயிரம் காலமாக வாழ்விக்க பல விஷயங்கள் உதவியுள்ளது. அதில் முக்கியமானது ஆழ்வார்கள் அருளிய ஸ்ரீ திவ்ய பிரபந்தம். கவசம் கனெக்ட் யூடுப் சேனலில் தினமும் ஒரு பாசுரம் என அடுத்து 4000 நாட்களுக்கு நம்மை தமிழுயிலும், பக்தியிலும், ஆன்மீகத்திலும் ஈடுபடுத்த டாக்டர் வெங்கடேஷ் வழங்கும் அந்த தினந்தோறும் பிரபந்தம் காணொளிகளை தொகுத்து உங்களுக்கு வழங்குவதில் விகடகவி மகிழ்ச்சி கொள்கிறது.

பெரியாழ்வார் திருமொழி 5-4-1 பாசுரம் 1

சென்னி ஓங்கு* தண் திருவேங்கடம் உடையாய்!* உலகு தன்னை வாழ நின்ற நம்பீ!* தாமோதரா! சதிரா!* என்னையும் என் உடைமையையும்* உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு* நின் அருளே புரிந்திருந்தேன்* இனி என் திருக் குறிப்பே - பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியாழ்வார் திருமொழி 5-4-2. சென்னி ஓங்கு பதிகம் - 2-ம் பாசுரம் பறவை ஏறு பரம் புருடா! நீ என்னைக் கைக்கொண்ட பின்* பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் இறவு செய்யும் பாவக் காடு தீக்கொளி இவேகின்றதால் அறிவை என்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க் கொண்டதே - பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

திருவேங்கடமுடையானுக்கும் பெரியாழ்வாருக்கும் நடந்த வாக்குவாதம் பெரியாழ்வார் திருமொழி 5-4-3. சென்னி ஓங்கு பதிகம் - 3-ம் பாசுரம் எம்மனா! என் குல தெய்வமே! என்னுடை நாயகனே! நின் உளேனாய்ப் பெற்ற நன்மை இவ்வுலகினில் ஆர் பெறுவார் நம்மன் போலே வீழ்த்தமுக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம் சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே. - பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியாழ்வார் திருமொழி 5-4-4. சென்னி ஓங்கு பதிகம் - 4-ம் பாசுரம் கடல் கடைந்தமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல் உடல் உருகி வாய் திறந்து மடுத்துன்னை நிறைத்துக் கொண்டேன் கொடுமை செய்யும் கூற்றமும் என் கோல் ஆடி குறுகப் பெறா தட வரைத் தோள் சக்கர பாணீ! சார்ங்க விற் சேவகனே! - பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியாழ்வார் திருமொழி 5-4-5 சென்னி ஓங்கு பதிகம் - 5-ம் பாசுரம் பொன்னைக் கொண்டுரைகல் மீதே நிறமெழ உரைத்தாற் போல் உன்னைக் கொண்டென் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன் உன்னைக் கொண்டென்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் என் அப்பா! என் இருடீகேசா! என் உயிர்க் காவலனே! - பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியாழ்வார் திருமொழி 5-4-6 சென்னி ஓங்கு பதிகம் - 6-ம் பாசுரம் உன்னுடைய விக்கிரமம் ஒன்றோழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர்வழி எழுதிக் கொண்டேன் மன் அடங்க மழு வலங்கைக் கொண்ட இராம நம்பீ! என்னிடை வந்தெம் பெருமான்! இனி எங்குப் போகின்றதே - பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியாழ்வார் திருமொழி 5-4-7 சென்னி ஓங்கு பதிகம் - 7-ம் பாசுரம் பெரியாழ்வார் திருமொழி 5.4.7ஆம் பாசுரம் பருப் பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல் திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் மருப் பொசித்தாய்! மல் அடர்த்தாய்! என்றென்றுன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை உனக்குரித்தாக்கினையே. - பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியாழ்வார் திருமொழி 5-4-8 சென்னி ஓங்கு பதிகம் - 8-ம் பாசுரம் அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனம் தன் உள்ளே வந்து வைகி வாழச் செய்தாய் எம்பிரான்! நினைந்தென் உள்ளே நின்று நெக்குக் கண்கள் அசும்பொழுக நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே! - பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியாழ்வார் திருமொழி 5-4-8 சென்னி ஓங்கு பதிகம் - 8-ம் பாசுரம் அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனம் தன் உள்ளே வந்து வைகி வாழச் செய்தாய் எம்பிரான்! நினைந்தென் உள்ளே நின்று நெக்குக் கண்கள் அசும்பொழுக நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே! - பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியாழ்வார் திருமொழி 5-4-10 சென்னி ஓங்கு பதிகம் - 10-ம் பாசுரம் தட வரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடிப் போல் சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ! வட தடமும் வைகுந்தமும் மதிள் துவரா பதியும் இட வகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே. - பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியாழ்வார் திருமொழி 5-4-11 சென்னி ஓங்கு பதிகம் - 11-ம் பாசுரம் வேயர் தங்கள் குலத்துதித்த* விட்டுசித்தன் மனத்தே* கோயில் கொண்ட கோவலனைக்* கொழுங்குளிர் முகில் வண்ணனை* ஆயர் ஏற்றை அமரர் கோவை* அந்தணர் தம் அமுதத்தினை* சாயை போலப் பாட வல்லார்* தாமும் அணுக்கர்களே. பெரியாழ்வார் திருவடிகளே சரணம். - பெரியாழ்வார் திருவடிகளே சரணம்